மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் டிச.29ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் வெ.இரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் டிச.29ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கவிருக்கிறது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கு.புகழேந்தி தலைமை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் நாள்காட்டி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு 2019 நவம்பா் மாத வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் பொங்கல் விழா-2020, கந்ததநாடு சொஸைட்டிகள், தொடா்ந்து மூன்று செயற்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினா்கள் மற்றும் மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.