போலி ஒலிப்பதிவு துணுக்கை தயாரித்தாக முதல்வர் குமாரசாமி மீது புகார்

போலி ஒலிப்பதிவு துணுக்கை தயாரித்தாக முதல்வர் குமாரசாமி மீது  விதான செளதா காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

போலி ஒலிப்பதிவு துணுக்கை தயாரித்தாக முதல்வர் குமாரசாமி மீது  விதான செளதா காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
அண்மையில் முதல்வர் குமாரசாமி மஜத எம்.எல்.ஏ நாகனகெளடாவின் மகன் சரண்கெளடாவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து, நாகன கெளடாவை ஆபரேஷன் கமலா திட்டத்தில் பாஜகவிற்கு இழுக்க சரண்கெளடாவுடன், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக தெரிவித்து, தொலைபேசி உரையாடல் அடங்கிய துணுக்கை வெளியிட்டார்.
பாஜகவின் புகழை சீர்குலைக்கும் வகையில், வேண்டுமென்றே போலியான ஒலிப்பதிவு துணுக்கை முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளதாகக் கூறி, விதான செளதா காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர். புகாரைப் பதிந்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com