போதைப்பொருள் விற்றதாக மாணவர் உள்பட 2 பேர் கைது

போதைப்பொருள் விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு சுத்தகுன்டேபாளையாவைச் சேர்ந்த ஜீனத் அகமத் (24) மற்றும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் நீலகண்டன்(19) ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, பெங்களூரு மாரதஹள்ளி, ஜெயதேவா, கோரமங்களா, பன்னரகட்டா  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு அருகே விற்பனை செய்து வந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் ஜீனத் அகமத், நீலகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com