பஞ்சாயத்து உறுப்பினர் கத்தியால் குத்தி கொலை
By DIN | Published On : 20th February 2019 08:13 AM | Last Updated : 20th February 2019 08:13 AM | அ+அ அ- |

முன்விரோதத்தால் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மண்டியா மாவட்டம், பாண்டுவபுரா வட்டம், சிக்காடே கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மே கெளடா (50). இவர் அதே கிராமத்தின் பஞ்சாயத்தில் உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். திங்கள்கிழமை இரவு கிராம தெய்வத்திற்கான திருவிழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்மகும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த திம்மே கெளடா நிகழ்விடத்திலே உயிரிந்தார். தடுக்கச் சென்ற அவரது மகன்கள் வினோத், விநாயக், கெளதம் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து பாண்டுவப்புரா ஊரகப் போலீஸார், முன்விரோதம் காரணமாக திம்மேகெளடா கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.