தமிழியக்கத்தின் அயல்மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

தமிழியக்கத்தின் இந்திய அயல்மாநிலங்கள் ஒருங்கிணைப்பாளராக மைசூரு தமிழ்ச் சங்கச் செயலாளர் கு.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழியக்கத்தின் இந்திய அயல்மாநிலங்கள் ஒருங்கிணைப்பாளராக மைசூரு தமிழ்ச் சங்கச் செயலாளர் கு.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழியக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நிலம், தமிழர்நலம் என்ற இலக்கோடு, உலகில் உள்ள அனைத்து தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைக்கும் வகையில் செல்லும் வழியெல்லாம் தமிழினம் வெற்றி பெறும் வகையில் செயலாற்றிடத் தமிழியக்கம் அக்.15-ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
தமிழியக்கத்தின் இந்திய அயல்மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக மைசூரு தமிழ்ச் சங்கச்செயலாளராக பங்காற்றி வரும் கு.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்ப் பணித்தேரின் வடம் பிடிக்கவும், தமிழ்த்தொண்டுக்களத்தில் இடம் பிடிக்கவும், தமிழர் நலக்கடமைகளில் தடம் பதிக்கவும் உழைக்க அனைவரையும் அழைக்கின்றோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com