சாலை தடுப்புச் சுவரில் கார் மோதியதில் இருவர் சாவு

சாலைத் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.

சாலைத் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
ராய்ச்சூரு மாவட்டம், சிந்தனூருக்கு வெள்ளிக்கிழமை காலை காரில் ஹனீப்குரோஷி (60), மகன் அப்துல்லா (16) உள்ளிட்ட 4 பேர் சென்று கொண்டிருந்தனர். சிந்தனூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹனீப்குரோஷி, அப்துல்லா ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். 
காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிந்தனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com