குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

பெங்களூரில் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரில் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு எலஹங்கா அட்டூர் அக்ஷயாநகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி பிரியா (36). இவர்களது மகன் ஆகாஷ், மகள் பிரிதிக்ஷா (9). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுரேஷ்பாபு, செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றிருந்தார். பியுசி படிக்கும் ஆகாஷ் கல்லூரிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த மகள் பிரதிக்ஷாவை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த ஆகாஷ், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பிரியா, பிரிதிக்ஷô ஆகியோரிடம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com