முதல்முறையாக அச்சிட்ட நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக அச்சிட்ட நூல்களை நூலகங்களுக்கு விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

முதல்முறையாக அச்சிட்ட நூல்களை நூலகங்களுக்கு விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.
இதுகுறித்து பொது நூலகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2019, ஜன.1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்ட இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமர்சன இலக்கியம் தொடர்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்தியமொழி இலக்கியங்களை முதல் கட்டமாக கொள்முதல் செய்ய பொதுநூலகத் துறை திட்டமிட்டுள்ளது.
10 ஆண்டுகள் இடைவெளிகொண்டு மறு பதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும். இதுதொடர்பாக எழுத்தாளர்கள், எழுத்தாளர்-பதிப்பாளர், பதிப்பாளர், அமைப்புகள், விற்பனையாளர்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின்பெயர், நூலாசிரியரின் பெயர், பதிப்பாளரின் பெயர், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும். கொள்முதல் செய்யதிட்டமிட்டுள்ள நூல்களில் கன்னடநூல்கள்(அனைத்துவகை)80 சதவீதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இதர இந்தியமொழி நூல்கள் 20 சதவீதம் கொள்முதல்
செய்யப்படும். 
32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும் (குழந்தை நூல்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது). 
செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை நூலகப்பிரிவு, மாநில தலைமை நூலகம், கப்பன்பூங்கா, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு  ‌w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌p‌u​b‌l‌i​c‌l‌i​b‌r​a‌r‌y.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலோ  அல்லது 080-22864990, 22867358 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com