ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெல்லாரி மாவட்டம், ஹக்ரிபொம்மனஹள்ளியைச் சேர்ந்த 6 பேர் தென்கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவுக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். சிக்மகளூரு மாவட்டம், கடூர் வட்டம், ஹுட்டேபோரனஹள்ளியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் மகேஷ், நாகராஜ், சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 3 பேர் சிக்மகளூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சக்ரபட்டணா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.