இன்று இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.


பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து கர்நாடக மார்வாரி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பகவான் மகாவீர் மாற்றுத் திறனாளிகள் உதவிக் குழுவின்(ஜெய்ப்பூர் செயற்கைக்கால்)ஒத்துழைப்புடன் கர்நாடக மார்வாரி அமைப்பு சார்பில் பெங்களூரு, ஜெயநகர், அசோகா தூண் அருகே உள்ள மகாராஜா அக்ரசென் மாளிகையில் ஜுலை 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.  செயற்கைக்கால் முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் 9620000244, 9886521885 ஆகிய செல்லிடப்பேசிகளில் பதிவு குறித்த விவரங்களைப் பெறலாம்.  இந்த முகாம் பெங்களூரில் 12-ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com