பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து கர்நாடக மார்வாரி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பகவான் மகாவீர் மாற்றுத் திறனாளிகள் உதவிக் குழுவின்(ஜெய்ப்பூர் செயற்கைக்கால்)ஒத்துழைப்புடன் கர்நாடக மார்வாரி அமைப்பு சார்பில் பெங்களூரு, ஜெயநகர், அசோகா தூண் அருகே உள்ள மகாராஜா அக்ரசென் மாளிகையில் ஜுலை 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது. செயற்கைக்கால் முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் 9620000244, 9886521885 ஆகிய செல்லிடப்பேசிகளில் பதிவு குறித்த விவரங்களைப் பெறலாம். இந்த முகாம் பெங்களூரில் 12-ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.