இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு கிரிநகரைச் சேர்ந்தவர் ரவீந்திரராவ் (38). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த ஜூன் 11-ஆம் தேதி நள்ளிரவு ஸ்கூட்டரில் சென்றபோது, ராகவேந்திரா பிளாக்கில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவீந்திரராவ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இது குறித்து பசவனகுடி போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து: பெங்களூரு லக்கெரே லவகுஷாநகரைச் சேர்ந்தவர் கங்காதர் (59). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வெள்ளிக்கிழமை மாலை ஸ்கூட்டரில் வெளியே சென்றபோது, லக்கெரே பிரதான சாலையில் சரக்கு மினி லாரி, ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கங்காதர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜாஜிநகர் போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.