டிப்ளமோ பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள், லேட்டரல் என்ட்ரி திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில்(பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தேர்வு ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, டிப்ளமோ பொது நுழைவுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 21-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை 180 மதிப்பெண்களுக்கு மாணவர்களின் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வும், அன்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிநாடு மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக கன்னட மொழித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.