பெங்களூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் ஜூலை 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்


பெங்களூரில் ஜூலை 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக பெங்களூரு,  டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஜூலை 15-ஆம் தேதி (திங்கள்கிழமை)  காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா,  நிதி, ஆட்டோமொபைல்,  உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கானிக்கல் துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.  முகாமில் 
5 ஆயிரம் பேருக்கு மேலான வேலைதேடுவோர் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.  இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் எழுத்தறிவில்லாதவர்கள்,  பாதியில் பள்ளி படிப்பை இழந்தவர்கள்,  எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. 
18-30 வயதுக்குட்பட்ட புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.  வேலை தேடிவருவோர் தன்விவரக் குறிப்பு 6 படிகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 6 படிகள்,  அசல் மற்றும் நகல் கல்விச்  சான்றிதழ்கள்,  ஆதார் அட்டை,  பான் அட்டை,  ஓட்டுநர் உரிமம்,  வாக்காளர் அடையாள அட்டை,  கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு 080-22289668, 22261184, 22374582, 22268846, 22259351 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com