வேளாண் விற்பன்னர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வேளாண் விற்பன்னர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேளாண் விற்பன்னர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துவேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  வேளாண்மையில் புதுமையான முறைகள்,  மாறுபட்ட செயல்முறைகள், இயற்கையான விளைமுறைகளில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ள விவசாயிகளை கெளரவிப்பதற்காக வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் வேளாண் விற்பன்னர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டுக்கான வேளாண் விற்பன்னர் விருதுக்கு தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள வேளாண்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்று,  அதை நிரப்பி அங்கேயே ஜூலை 20-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு உழவர் தொடர்பு மையங்கள் அல்லது வேளாண்மை துறை வட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com