வேளாண் விற்பன்னர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துவேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மையில் புதுமையான முறைகள், மாறுபட்ட செயல்முறைகள், இயற்கையான விளைமுறைகளில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ள விவசாயிகளை கெளரவிப்பதற்காக வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் வேளாண் விற்பன்னர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டுக்கான வேளாண் விற்பன்னர் விருதுக்கு தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள வேளாண்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்று, அதை நிரப்பி அங்கேயே ஜூலை 20-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உழவர் தொடர்பு மையங்கள் அல்லது வேளாண்மை துறை வட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.