திருட்டு வழக்கில் இளைஞரைக் கைது செய்த போலீஸார், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, காரை பறிமுதல் செய்தனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் அத்தில் (23). இவர் கடந்த ஜூன் 6-ஆம் தேதி பெங்களூரு ஹெப்பாள் கல்யாணநகரில் வசிக்கும் இப்திகார் என்பரின் வீட்டில் புகுந்து தங்கநகை, மடிக்கணினி, கேமரா, காரை திருடிச் சென்றார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஹெப்பாள் போலீஸார், அத்திலைக் கைது செய்து, ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, காரை பறிமுதல் செய்தனர்.