பெங்களூரில் வைர ஆபரணக் கண்காட்சி ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆக. 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆபரணக் கண்காட்சியை நடிகை ஹரிப்பிரியா தொடக்கிவைத்தார். இதில் கலந்து கொண்ட அதன் ஒருங்கிணைப்பாளரும், அபரஞ்சி ஆபரண மாளிகையின் இயக்குநருமான அம்பிகா நாராயண் செய்தியாளர்களிடம் கூறியது:
பெங்களூரு லாவெல்லி சாலையில் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆக. 5-ஆம் தேதி வரை வைர ஆபரணக் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் நவீன வடிவமைப்பு, பாரம்பரிய கலாசாரமுள்ள வைரங்கள் இடம்பெற்றுள்ளன. வைர ஆபரணக் கண்காட்சிக்கு கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் பிரேம்ஹொர்க் குழுமத்தின் தலைவர் சச்சின் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.