மைசூரில் இன்று ஆடிவெள்ளி திருவிளக்கு பூஜை

மைசூரு தமிழ்ச் சங்கம் சார்பில் ஜூலை 19-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) ஆடிவெள்ளி திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.


மைசூரு தமிழ்ச் சங்கம் சார்பில் ஜூலை 19-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) ஆடிவெள்ளி திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
மைசூரு தமிழ்ச் சங்கத்தின் மகளிர் அணி சார்பில் ஜூலை 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மைசூரு, டி.கே.லேஅவுட் அருகில் உள்ள பிரம்மஸ்தான கல்யாண மண்டபத்தில் ஆடிவெள்ளி திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு திருவிளக்கு பூஜையில் தமிழ் நண்பர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் அனைவரும் கலந்து கொள்ளலாம். திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நிகழ்விடத்துக்கு வர வேண்டும். பூஜை செய்ய தேவையான அனைத்து பொருள்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. திருவிளக்கு பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நபர்கள் சூரியா கணேஷ்-09880054937, பூங்குழலி சாந்தமூர்த்தி-9448128881, அமுதா பிரசாத்-07411795166 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com