முதுநிலை பட்டப்படிப்பு பொது நுழைவுத் தேர்வு: ஜூன் 13 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஜூன் 13-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.

முதுநிலை பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஜூன் 13-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 2019-20-ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 24-ஆம் தேதிமுதல் ஜூன் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிவரை  ‌w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வங்கியில் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டை இணையதளத்திலேயே இணைக்க வேண்டும்.  விண்ணப்பக் கட்டணத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை வங்கியில் செலுத்தலாம். 
முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான பொதுநுழைவுத் தேர்வு ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கின்றன.  ஜூலை 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஸ்வேஷ்வரையா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கும், ஜூலை 14-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை எம்பிசி பட்டப்படிப்புகளுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை எம்பிஏ பட்டப்படிப்புகளுக்கும்,  தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 
இந்த தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை ஜூலை 1-ஆம் தேதிமுதல் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com