காட்டில் விலங்குகளை வேட்டையாடியதாக 5 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ராயசமுத்ரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (32), கணேஷ் (24), நவீன்கெளடா (25), மாதேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகா (29), திருகனஹள்ளியைச் சேர்ந்த லோகேஷ் (29) ஆகியோர் மேல்கோட்டை சரகம் நாராயணதுர்கா கொத்தப்பனகட்டி அருகே உள்ள காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறை அதிகாரிகள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து காட்டுப்பூனை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.