லாரி மீது பேருந்து மோதல்: நடத்துனர், ஓட்டுநர் சாவு
By DIN | Published On : 24th June 2019 10:18 AM | Last Updated : 24th June 2019 10:18 AM | அ+அ அ- |

நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், நடத்துநர், ஓட்டுநர் உயிரிழந்தனர்.
பெங்களூரில் இருந்து சனிக்கிழமை இரவு ராய்ச்சூருக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து சிந்தனூர் வட்டத்தில் உள்ள கன்னடி கிராஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நின்றிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்து ஓட்டுநர் சந்திரசேகர் (35), நடத்துனர் ஷிவனேகெளடா ஆகியோர் பலத்த காயம் அடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிந்தனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.