மான் வேட்டை: 2 பேர் கைது

மானை வேட்டையாடியதாக 2 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

மானை வேட்டையாடியதாக 2 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
சிக்மகளூரு ஹலசூரைச் சேர்ந்த விநாயக், சுதர்ஷன், நாகேஷ், கணேஷ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடியுள்ளனர். தகவலறிந்த வனத் துறை ஊழியர்கள், அதிகாரி விஜயகுமார் தலைமையில் அங்கு சென்று, விநாயக், சுதர்ஷனைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மான் தோல், 2 நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தலைமறைவான நாகேஷ், கணேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com