போதைப்பொருள் விற்றதாக இளைஞர் கைது

போதைப்பொருள் விற்றதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் விற்றதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் டோரே முஸ்தபா(44). இவர் பெங்களூரு ஹென்னூர் சிக்கண்ணா லேஅவுட்டில் வசித்து வந்தாராம். இவர் தனது வீட்டில் போதை பொருள் கஞ்சாவை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று டோரே முஸ்தபாவைக் கைது செய்து, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சா, 3 செல்லிப்பேசிகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஹென்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com