பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் செய்ய கர்நாடக தேர்வு ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்பித்திருந்த மாணவர்கள், சில விவரங்களை தவறாக பதிவு செய்துள்ளதாகவும் அதை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டிருந்தனர். மாணவர்களின் நலன்கருதி விண்ணப்பப் படிவங்களில் சாதி உள்பிரிவு, கன்னட பயிற்றுமொழி, ஊரக இடஒதுக்கீடு, ஹைதரபாத்-கர்நாடக சிறப்பு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
உரிய உறுதி சான்றிதழ்களுடன் நிர்வாக அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியை அணுகி விண்ணப்பப்படிவங்களில் மே 9-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் மே 13-ஆம் தேதிமாலை 5.30மணிவரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://kea.kar.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.