முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பலி
By DIN | Published On : 15th May 2019 08:12 AM | Last Updated : 15th May 2019 08:12 AM | அ+அ அ- |

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாநகரப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிக்பள்ளாபூரு மாவட்டம், மத்தேரெட்டிஹள்ளியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். குடிபன்டே வட்டம், மஞ்சனபெலே மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 7-இல் எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த நாகேஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சிக்பள்ளாபூரு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.