பெங்களூரில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் ஆவளஹள்ளியைச் சேர்ந்தவர் ஷியாம்தாஸ் (25), ஹரீஷ்குமார் (24), கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கல்யாம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபீன் ஜான் (21). இவர்கள் 3 பேரும் இணைந்து பெங்களூரு சுத்தகுன்டேபாளையா பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று ஷியாம்தாஸ், ஹரீஷ்குமார், ஜெபீன் ஜானைக் கைது செய்து, ரூ. 4.66 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுத்தகுன்டே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.