கட்டடக்கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என்று கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக தேர்வு ஆணையத்தின் வாயிலாக கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற, பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு விண்ணப்பித்திருப்பது கட்டாயமாகும். எனவே, கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற தேசிய கட்டடக்கலை திறனறித்தேர்வு (National Aptitude Test in Architecture-NATA) எழுதியிருக்கும், ஆனால், பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்காத மாணவர்கள், www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் மே 14-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மே 18-ஆம் தேதி மாலை 5.30மணிக்குள் உரிய கட்டணங்களுடன் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிடாதவர்களுக்கு கட்டடக்கலைஞர் படிப்புக்கான சேர்க்கை பெற இயலாது. மேலும் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.