தொழில் தகராறு:  வியாபாரி கொலை

பெங்களூரு சிட்டி சந்தை பகுதியில் இரு வியாபாரிகளுக்கிடையே தொழில்முறையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு சிட்டி சந்தை பகுதியில் இரு வியாபாரிகளுக்கிடையே தொழில்முறையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு பழைய குட்டதள்ளியைச் சேர்ந்தவர் பரத் (32). இவர் சிட்டிமார்கெட் அருகில் எலுமிச்சை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சரவணன் என்பவருக்கும் இடையே தொழில்முறையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பரத் மீது சரவணன் தனது நண்பர்களுடன் வந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பரத் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த சிட்டிமார்கெட் போலீஸார் தலைமறைவான சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com