மீன் வியாபாரி கொலை: 3 பேர் கைது
By DIN | Published On : 16th May 2019 09:10 AM | Last Updated : 16th May 2019 09:10 AM | அ+அ அ- |

மீன் வியாபாரி கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி ரோஷன்நகரைச் சேர்ந்தவர் ஜரார் (30). இவர் டி.ஜே.ஹள்ளி பிரதானசாலை அருகே மீன் வியாபாரம் செய்து வந்தார். பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ஜரார், அதே பகுதியில் வசிக்கும் ஈஷாக் என்பவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ரோஷன்நகரில் தங்கையின் வீட்டில் தங்கிருந்த ஜராரை, ஈஷாக் தனது நண்பர்களுடன் சென்று தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தகவல் அறிந்த போலீஸார், அதே பகுதியில் மறைந்திருந்த ஈஷாக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த டி.ஜே.ஹள்ளி போலீஸார் தப்பியோடியுள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.