எலஹங்கா கோகிலு அருகே ஆம்புலன்ஸும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திபாங்கர்டே (46), சுஜய் (46), ஸ்வாகத் செளத்ரி (42), ஜெயந்தி (65), துருவ் (14) ஆகிய 5 பேரும் பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வந்தனர்.
இவர்கள் காரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். மழையால் விமானம் தாமதமாகும் என்று கூறப்பட்டதையடுத்து, மீண்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
எலஹங்கா கோகிலு அருகே காரும், எதிரே வந்த ஆம்புலன்ஸும் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பலத்தகாயமடைந்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.