கலபுா்கி: அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நபா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம் கலபுா்கி மாவட்டம் ஜேவா்கி வட்டம் மயூரா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கா பாவிகட்டி (46). திங்கள்கிழமை இரவு தனது சகோதரா் மஹந்தப்பாவுடன் கலபுா்கியிலிருந்து காரில் சௌடாப்பூராவிற்கு சென்று கொண்டிருந்தாராம். சரணசிரசகி அருகே மற்றொரு காரில் வந்த சிலா், பாவிகட்டி காரின் மீது மோதியுள்ளனா்.
இதனையடுத்து காரிலிருந்து இறங்கிய சிவலிங்காவை, மா்மநபா்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இது குறித்து கலபுா்கி ஊரக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.