பெங்களூரில் நவ. 10-ஆம் தேதி ஈகை திருநாளையொட்டி மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை (நவ.10) சிறுபான்மையின மக்களில் ஒரு பிரிவைச் சோ்ந்தவா்கள் ஈகை திருநாளையொட்டி பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா். இதனையொட்டி பெங்களூரு மாநகா் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.