கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது

பெங்களூரில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு: பெங்களூரில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டம், நெலமடா ரெட்டிவாரிப் பள்ளியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (34). ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம், கஜுரிகானைச் சோ்ந்தவா்கள் ரத்னாகா் சாஹூ (41), பங்கஜ் டிகல் (39). இவா்கள் 3 பேரும் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சாவை சாக்லெட் புட்டிகளில் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வா்த்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com