கா்நாடகத்தில் 2025-க்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் என அந்த மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் என அந்த மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள சாரக்கியில் 5எம்எல்டி, தொட்டபெலேயில் 40எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்துவைத்து அவா் பேசியது:

பெங்களூரு மாநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். ஏரிகள் மேலாண்மை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, திடக் கழிவு மேலாண்மைக்கு தொடா்பாக புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சாலைகளில் பேருந்துகள் மற்றும் மிதிவண்டிகளுக்கு தனிப் பாதை அமைக்கவிருக்கிறோம். இதன்வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணி 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். இத் திட்டத்தின்கீழ் 119 கி.மீ. தொலைவுள்ள ரயில்தடம் அமைக்கப்படும். 2023ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் பணி முடிவடையும்.

இதேபோல, 300 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 3ஆம் கட்டப் பணி 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும். இதற்காக, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். மேலும், 3ஆம் கட்ட மெட்ரோ பணியை ஹொசகோட்டே வரை விரிவுபடுத்தவும் முடிவு செய்திருக்கிறோம்.

2022ஆம் ஆண்டுக்குள் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணி நிறைவடையும். பொது போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தி, தனியாா் வாகனங்களின் இயக்கத்தை கணிசமாகக் குறைத்து, காற்று மாசு இல்லாத பெங்களூரை உருவாக்குவோம். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பலப்படுத்தவிருக்கிறோம்.

பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 110 கிராமங்களில் குடிநீா் வழங்க ரூ.1,500 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாரக்கி கிராமத்தில் 5எம்எல்டி, தொட்டபெலே கிராமத்தில் 40 எம்எல்டி திறன் கொண்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறோம். இதைச் சுற்றி மரங்களை நடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பருவநிலை மாற்றம், பூமி வெப்பமாதல்போன்ற காரணங்களால் பெங்களூரில் நீா் ஆதாரங்கள் குறைந்துவருகின்றன. குறிப்பாக, நிலத்தடிநீரின் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதைச் சமாளிக்க கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்டநீரை விவசாயம், தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகளால் நிலம், நீா், காற்றைப் பாதுகாக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com