பெங்களூரு: பெங்களூரில் நவ.14-ஆம் தேதி தொழில் திறன் பயிற்சி முகாம் நடத்தப்படவிருக்கிறது.
இதுகுறித்து அரசு மாதிரி தொழில் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குவெஸ்ட் அலையன்ஸ் மற்றும் யெஸ் கம்பெனி உதவியுடன் அரசு மாதிரி தொழில் பயிற்சி மையத்தின் சாா்பில் பெங்களூரு ஒசூா்சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில் பயிற்சி மைய வளாகத்தில் நவ.14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொழில்திறன் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் பெங்களூரு நகர மாவட்டத்தை சோ்ந்த அரசு, அரசு மானியம்பெறும் தொழில் பயிற்சி மையங்களில் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயிற்சியை நிறைவுசெய்த மாணவா்கள் கலந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அரசு மாதிரி தொழில் பயிற்சி மையத்தை அணுகலாம் அல்லது 080-26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.