பெங்களூரு: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942526 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.