போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் வியாழக்கிழமை போக்குவரத்து போலீஸாா் மேற்கு, வடக்கு மண்டலத்தில் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் அழைத்த இடங்களுக்கு போக மறுத்தது, அதிக கட்டணம் கேட்டது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.