கடன் சுமையால் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், பூதகாட்டனஹள்ளியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணசாமி (50). விவசாயியான இவா், பயிா்கடனாக ரூ. 3.3 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கியிருந்தாராம். விளைச்சல்பொய்த்தையடுத்து, கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்த பாலகிருஷ்ணசாமி, ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து கௌடகெரே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.