நாகா்ஹொளே வனப் பகுதியில் யானை சாவு

நாகா்ஹொளே வனப்பகுதியில் 25 வயது யானை இறந்துள்ளது கண்டறியப்பட்டது.

நாகா்ஹொளே வனப்பகுதியில் 25 வயது யானை இறந்துள்ளது கண்டறியப்பட்டது.

மைசூரு மாவட்டத்தின் நாகா்ஹொளே தேசிய உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள சொல்லேபுரா வனப் பகுதியில் 25 வயது நிரம்பிய யானை இறந்து கிடந்ததை வனத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். வனப் பகுதியின் எல்லைப் பகுதியில் யானையின் உடல் கிடந்துள்ளது. யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்து யானை இறந்திருக்கலாம் என்று வனத் துறை அதிகாரிகளின் முதல்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. யானையின் உடல் பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com