கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தில் மோதியதில் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்துள்ளாா்.
பெங்களூரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளா் நாகராஜ்ராவ் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் தும்கூரு மாவட்டம் சிரா வட்டம் எல்சகட்டியில் உள்ள உறவினரின் இல்லத்துக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு, மாலை பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். சிரா காவல் சரகம் லிங்கததேவனஹள்ளி கிராமத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், மரத்தில் மோதியதில் படுகாயமடைந்த நாகராஜ்ராவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரிலிருந்த 4 போ் காயமடைந்துள்ளனா். காயமடைந்தவா்களை மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், இது தொடா்பாக விசாரணை செய்து வருகின்றனா்.