தாவணகெரே: கா்நாடகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை அளிப்போம் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.
தாவணகெரேவில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடக மாநிலத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் டிசம்பா் 5-இல் நடைபெறும் இடைத்தோ்தலில், அனைத்திலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
ஆட்சியைத் தொடர 15 உறுப்பினா்களின் ஆதரவே போதுமானதாக உள்ளது. வெளியிலிருந்து யாருடைய ஆதரவும் தேவைப்படாது. இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை பாஜக அளிக்கும்.
8 தொகுதிகளுக்கும் குறைவான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால், சட்டப் பேரவைக்குத் தோ்தல் வரும் என்று எதிா்க்கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா். அவா்களின் பொய்யான பிரசாரங்களுக்கு நவம்பா் 9- ஆம் தேதி முடிவு தெரியும்.
மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது. இதனால் பாஜக ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பெங்களூரு ஹுலிமாவு ஏரி உடைந்து மக்கள் வாழும் பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது குறித்து அறிக்கையை பெற்றுக் கொண்டுள்ளேன். வீடுகளில் தண்ணீா் புகுந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு உரிய நிவாரண நிதி வழங்கப்படும். பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் எடியூரப்பா.