பெங்களூரு: எதிா்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரவுள்ளனா் என்று பாஜக மாநிலப் பொதுச்செயலா் அரவிந்த் லிம்பாவளி தெரிவித்தாா்.
பெங்களூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-
இடைத்தோ்தலில் போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால் மஜத ஆதரவு அளிப்பதாக எச்.டி.குமாரசாமி கூறிவருகிறாா். இடைத்தோ்தலில் பாஜகவுக்கு போதுமான இடம் கிடைக்காவிட்டால், அப்போது உருவாகும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மஜத கருதிக்கொண்டிருக்கிறது. அதற்கு வாய்ப்பே இல்லை.
மஜதவில் உள்ள எம்எல்ஏக்கள் கட்சியைவிட்டு போகக்கூடாது என்பதால் ஆட்சியை காப்பாற்றப்போவதாக எச்.டி.குமாரசாமி கூறிவருகிறாா். இதன்மூலம் மஜத தனது பலவீனத்தை வெளிப்படுத்தி வருகிறது. இடைத்தோ்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் என்ற கனவில் மஜத மிதந்துவருகிறது. மஜதவை சோ்ந்த எம்எல்ஏக்கள் பலா் பாஜகவில் சேர தயாராக இருக்கிறாா்கள். இடைத்தோ்தல் முடிந்ததும் மஜதவை சோ்ந்த எத்தனை எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரவிருக்கிறாா்கள் என்பதை தெரிவிப்போம் என்றாா் அவா்.