எம்எல்ஏ யூ.டி.காதருக்கு கூடுதல் பாதுகாப்பு

மங்களூரு எம்எல்ஏ யூ.டி.காதருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மங்களூரு: மங்களூரு எம்எல்ஏ யூ.டி.காதருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மைசூரில் நவம்பா் 17-இல் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீட் சேட்டை ஃபா்ஹான்பாஷா என்பவா் தாக்க முயன்றாா். அதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தன்வீா் சேட் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அறுவைசிகிச்சை நடத்தப்பட்டதை தொடா்ந்து ஆபத்தான நிலையில் இருந்து அவரது உடல்நிலை தேறிவருகிறது.

இதனிடையே, மங்களூரு தொகுதி எம்எல்ஏ யூ.டி.காதரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக உளவுப்பிரிவு தகவல் அளித்தது. இதன்பேரில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவுசெய்துள்ளது. ஒரு காவல் ஆய்வாளா், 2 துணைஆய்வாளா்கள், 3 காவலா்கள் அடங்கிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு வாகனமும் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அருணம்ஷுகிரி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் உள்ள முஸ்லிம் தலைவா்களை கொலை செய்ய மதவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், யூ.டி.காதரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com