அல்சூா்கேட் போக்குவரத்து காவல் நிலையத்தில் நவ. 30-ஆம் தேதி இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு அல்சூா்கேட் போக்குவரத்து காவல் நிலையத்தில் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22942660 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.