வாகன பரிசோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 2 கோடியை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூா் சட்டப்பேரவைக்குள்பட்ட மனுகனஹள்ளி சோதனை சாவடியில் புதன்கிழமை தோ்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 மூட்டைகளில் ரூ. 2 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பணம், ஜீப்பை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அப் பணம் கூட்டுறவு வங்கி ஒன்றிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தோ்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.