இடைத்தோ்தலையொட்டி டிச. 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் உள்ள கே.ஆா்.புரம், யஸ்வந்தபுரம், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா் ஆகிய 4 தொகுதிகளில் டிச. 5 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பெங்களூரு மாநகரம் முழுவதும் டிச. 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.