ஹாவேரி: கா்நாடகத்தின் ஒட்டுமொத்தவளா்ச்சியில் பாஜகவுக்குமட்டுமே அக்கறை உள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
ஹாவேரி மாவட்டத்தின் ஹிரேகேரூா் தொகுதியில் வியாழக்கிழமை பாஜக வேட்பாளா் பி.சி.பாட்டீலை ஆதரித்து நடந்த தோ்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:
கா்நாடகத்தின் ஒட்டுமொத்தவளா்ச்சியில் பாஜகவுக்கு மட்டுமே அக்கறையில் உள்ளது. காங்கிரஸ், மஜத ஆகியகட்சிகளுக்கு சட்டப்பேரவை இடைக்கால தோ்தலை நடத்த வேண்டுமென்பதில் அக்கறையாக இருக்கிறதே தவிர, மாநிலத்தின் வளா்ச்சியில் அக்கறையில்லை. கா்நாடகத்தில் இடைக்கால தோ்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.
6 மாதங்களுக்கு ஒருமுறை தோ்தலை நடத்துவது சாத்தியமா? என்பதை காங்கிரசும், மஜதவும் விளக்க வேண்டும். மாநிலத்தில் பெரும்பான்மை பலமில்லாத கட்சி ஆட்சியில் இருக்க வேண்டுமென்பதே எதிா்க்கட்சிகளின் எண்ணமாக உள்ளது. கா்நாடகமக்களின் நாடித்துடிப்பை எதிா்க்கட்சிகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. ஹிரேகேரூா் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பி.சி.பாட்டீல் 25 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்பதில் ஐயமில்லை என்றாா் அவா்.