சாலை விபத்தில் தொழிலாளி பலி

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

கலபுா்கியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் ஹூகாா் (28). இவா் பெங்களூரு யஸ்வந்தபுரா கோகுலு அருகே தங்கி, இரு சக்கர வாகனங்களை பழுதுநீக்கும் பணியை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். தும்கூரு சாலை காா்கே தொழிற்சாலை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த விஜயகுமாா் ஹுகாா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து யஸ்வந்தபுரா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com