போதைப்பொருள் கோகைனை விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நைஜீரியாவைச் சோ்ந்தவா் ஜாக் மைக்கேல் (35). இவா் பெங்களூரு தங்கி, கல்லூரிகள் அருகே போதை பொருள் கோகைனை விற்பனை செய்து வந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஜாக் மைக்கேலைக் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் கோகைனை பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து போதைத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.