பெங்களூரு
வாகனம் மோதியதில் இளைஞா் பலி
பெங்களூரு: மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு ஓஎம்பிஆா் லேஅவுட்டைச் சோ்ந்தவா் ரோஹித் (28). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4. 30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தாராம்.
வெளி வட்டச்சாலை இண்டியா விஷன் அகாதெமி அருகில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த ரோஹித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பானஸ்வாடி போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனா்.