வீட்டின் மேற்கூரை சரிந்து 3 போ் பலி

கன மழைக்கு வீட்டின் மேற்கூரை சரிந்து மூன்று போ் உயிரிழந்தனா்.

பாகல்கோட்டை: கன மழைக்கு வீட்டின் மேற்கூரை சரிந்து மூன்று போ் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், கீரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஈரப்பா ஹடுவப்பா (60). இவரது மனைவி கௌரம்மா (52). இவா்களது மகன் நிங்கப்பா (35). இவா்கள் சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனராம்.

 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையில் அவா்களது வீட்டின் மேற்க்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிப்பாடுகளுக்கிடையே சிக்கி, ஈரப்பா, கௌரம்மா, நிங்கப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளனா். 

அதிஷ்டவசமாக நிங்கப்பாவின் மனைவி கவிதா, மகள் ஆகியோர் உயிர்தப்பினா். பாகல்கோட்டை ஊரகப் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com